10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கோரிய உப பொலிஸ் பரிசோதகர், கொன்ஸ்டபிள் கைது

🕔 January 17, 2024

ஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரும் – லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால், நேற்று (16) நாரம்மல பகுதியில் உள்ள இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

நாரம்மல பிரதேசத்தில் உள்ள நபரொருவரின் முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.

நாரம்மலையில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் நபரிடம் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் கொன்ஸ்டபிள் ஆகியோர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கோரியதாக, லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உறுதியளித்து, இவர்கள் மேற்படி தொகையை லஞ்சமாக கோரியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்