குரங்குகளுக்கு கருத்தடை: மாத்தளை மாவட்டத்தில் நடவடிக்கை

🕔 January 17, 2024

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கையொன்று மாத்தளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

பயிர்செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆண் குரங்குகளுக்கு கருத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பாக மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பேசப்பட்டுள்ளதாகவும், விவசாய அமைச்சு இதற்கான நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

“மாத்தளை மாவட்டத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இப்பிரதேசத்தில் குரங்குகளால் விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையில் முதன் முறையாக ஆண் குரங்குகளுக்கு கருத்தடை மேற்கொள்ளும் முன்னோடித் திட்டத்தை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்