மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமர்வில் கலந்து கொள்ள ஒரு மாதம் தடை

🕔 December 1, 2023

நாடாளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோர் – ஒரு மாத காலத்துக்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு – இவ்வாறு தடை விதிக்கத் தீர்மானித்துள்ளது.

ராஜாங்க அமைச்சர் டயனா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோருக்கு இடையில் கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே சிறப்புரிமைகள் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ இந்தத் தீர்மானத்தை இன்று (01) நாடாமன்றுக்கு அறிவித்தார்.

தொடர்பான செய்தி: வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் ராஜாங்க அமைச்சர் டயான கமகே முறைப்பாடு: வைத்தியசாலை சென்றும் திரும்பினார்

Comments