ஓய்வூதியத்துக்காக ஊழியர்களிடமிருந்து அறவிடும் நிதிப் பங்களிப்பை அதிகரிக்க வரவு – செலவுத் திட்டத்தில் யோசனை

🕔 November 13, 2023

ழியர்களிடமிருந்து ஓய்வூதியத்துக்காக அறவிடப்படும் நிதிப் பங்களிப்பை 08  சதவீதமாக அதிகரிப்பதற்கு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனையில் முன்மொழியப்பட்டுள்ளது.

விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியமானது, ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 6 – 7 சதவீதமான செலுத்தப்படும் பங்களிப்பாகும். இதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் ரூபா 65 பில்லியன் செலவு செய்கிறது.

 ஊழியர்களிடமிருந்து இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூபா 38 பில்லியன் அறவிடப்படுகிறது. 

எனவே, அரசதுறை ஊழியர்களின் பங்களிப்பு, இதனை வழங்குவதற்கு போதுமானதாக இல்லை.

ஆகவே இவ் ஓய்வூதியப் பங்களிப்புக்காக அறவிடப்படும் நிதிப் பங்களிப்பை 2024 ஏப்ரல் முதல் அனைத்து சேவைப் பிரிவினருக்கும் 08  சதவீதமாக அதிகரிப்பதற்கு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனையில் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த சரிசெய்தல் மூலம் ஆண்டுதோறும் ரூபா 09 பில்லியனை மேலதிகமாக அறவிடுவதற்கு முடிவதுடன், இது விதவைகள் மற்றும் அனாதைகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்ச்சியாக செயற்படுத்துவதையும் உறுதிப்படுத்துகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்