லலித் கொத்தலாவல பணயக் கைதியாக வைக்கப்பட்டு, அவரின் சொத்துக்களை ஒரு குழுவினர் எழுதியெடுத்துக் கொண்டனர்: நீதிமன்றில் தெரிவிப்பு

🕔 November 7, 2023

காலஞ்சென்ற தொழிலதிபரும் செலிங்கோ நிறுவனத்தின் தலைவருமான லலித் கொத்தலாவலவின் சுதந்திரமான நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, அவரை ஒரு குழுவினர் பணயக்கைதியாக வைத்திருந்ததாக குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலர் கொத்தலாவலவை சுற்றி வளைத்து – அவரை அச்ச மனநோய்க்குள் தள்ளினர் என – மறைந்த கொத்தலாவலவின் மைத்துனி ஷிரீன் விஜேரத்ன கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் கூறினார்.

லலித் கொத்தலாவல மரணம் தொடர்பான விசாரணை நேற்று (07) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சாட்சியாளர் இதனைக் குறிப்பிட்டார்.

“அவர் பரம்பரையாக பெற்ற சொத்துக்கள் உட்பட மதிப்புமிக்க சொத்துக்களை தங்கள் சொந்த பெயரில் எழுதுவதற்கு அவர்கள் அவரை கையாண்டனர்” எனவும் அவர் கூறினார்.

தொழிலதிபர் ஒரு இருண்டஅறையில் வைக்கப்பட்டார். தனது படுக்கையறையில் இருந்து அவரின் அலுவலகத்தில் உள்ள கூட்ட அறை (boardroom) வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டார் என்றும் அவர் கூறினார்.

“அவர்கள் அவரை அவரது குடியிருப்பில் இருந்து வெளியேறும்படி செய்து, அவரின் அலுவலகத்திற்கு மாற்றினர். அங்கு அவர் ஒரு இருண்ட அறையில் வைக்கப்பட்டார்” என்று அவர் மேலும் கூறினார்.

“அதன்பிறகு, மதிப்புமிக்க சொத்துக்களை தங்களுடைய பெயரில் எழுத வைத்தனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் மற்றும் ஷானன் திலேகரத்ன ஆகியோர் குடும்பத்துக்காக ஆஜராகியிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்