லலித் கொத்தலாவல பணயக் கைதியாக வைக்கப்பட்டு, அவரின் சொத்துக்களை ஒரு குழுவினர் எழுதியெடுத்துக் கொண்டனர்: நீதிமன்றில் தெரிவிப்பு 0
காலஞ்சென்ற தொழிலதிபரும் செலிங்கோ நிறுவனத்தின் தலைவருமான லலித் கொத்தலாவலவின் சுதந்திரமான நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, அவரை ஒரு குழுவினர் பணயக்கைதியாக வைத்திருந்ததாக குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிலர் கொத்தலாவலவை சுற்றி வளைத்து – அவரை அச்ச மனநோய்க்குள் தள்ளினர் என – மறைந்த கொத்தலாவலவின் மைத்துனி ஷிரீன் விஜேரத்ன கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில்