நாட்டில் சனத்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்

🕔 November 1, 2023

நாட்டில் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்று (01) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதலாவது கட்டிடமாக ஜனாதிபதி செயலகம் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு குடிசன மதிப்பீட்டில் தரவு சேகரிப்புக்கு அச்சிடப்பட்ட ஆவணங்களுடன் டெப்லெட் கணினிகள் பயன்படுத்துவது விசேட அம்சமாகும்-

இலங்கையில் முதன்முதலாக 1871ம் ஆண்டு உத்தியோகபூர்வமான சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக 2012ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது.

2012 ஆண்டின் கணக்கெடுப்புக்கு அமைய 52,67,000 வீட்டு வசதிகளும், 20. 4 மில்லியன் மக்களும் இலங்கையில் வாழ்வதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்