மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டண மீளாய்வு: கஞ்சனவின் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி

🕔 October 31, 2023

மின்சார கட்டணத்தை 03 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்வதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர – மேற்படி பிரேரணையை முன்வைத்தார்.

முன்பு 06 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.

எனினும் பொது மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு, மீளாய்வுக் காலம், 03 மாதங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக – அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்காலத்தில் 03 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் தொடர்பான மீளாய்வு மேற்கொள்ளப்படும்.

இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தின் அனுசரணையுடன் நீர் மின் கணிப்புகளை வலுப்படுத்தும் வகையில், தற்போதைய பொதுக் கொள்கை வழிகாட்டுதல்களை திருத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் முன்வைத்த கூட்டுப் பிரேரணைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்