ஆப்கானிஸ்தானில் இன்று மற்றொரு நிலநடுக்கம்: பேரழிவு தொடர்கிறது
மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கங்களில் பல ஆயிரம் மக்கள் பலியான நிலையில், மற்றொரு நிலநடுக்கம் இன்று (11) புதன்கிழமை ஏற்பட்டுள்ளது.
6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 05:10 மணிக்கு ஹெராட் நகருக்கு வடக்கே 28 கிமீ தொலைவில் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில்100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னர் ஏற்பட்ட நிலைநடுக்கத்தில் வீடுகள் அழிக்கப்பட்ட பின்னர் – பலர் திறந்த வெளியில் தூங்கிக் கொண்டிருந்த போது, இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வைகள், உணவு மற்றும் இதர பொருட்களுக்கு பற்றாக்குறையுள்ளதாக உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்பான செய்தி: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 03 ஆயிரத்தை நெருங்குகிறது: சர்வதேச உதவிகளை கோருகிறது ஐ.நா