ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீளவும் சேவைக்கு அழைக்க தீர்மானம்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு
ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு திரும்ப அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியினால் வைத்தியர்கள் நாட்டை விட்டும் வெளியேறியமை காரணமாக, வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள வைததியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
இந்த தீர்மானம் தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
இலங்கையில் கணிசமான எண்ணிக்கையிலான வைத்தியர்கள் மற்றும் நிபுணர்கள் சிறந்த ஊதியம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைத் தேடி – அண்மைக்காலமாக வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதனால்,வைத்தியசாலைளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.