03 கிலோகிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ வைத்திருந்தவர் கைது

🕔 August 30, 2023

‘ஐஸ்’ போதைப்பொருளை அதிகளவில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

மன்னார் – உயிலங்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 3 கிலோ 396 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதான அவர் மன்னார் பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 03 கோடி ரூபாவுக்கும் அதிகமானது எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் – மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்