அரிசி விலை அதிகரிக்கும்: காரணத்தை வெளியிட்டு, விவசாய அமைச்சர் எச்சரிக்கை

🕔 August 22, 2023

ரிசியின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திடம் அரிசி மற்றும் நெல்லுக்கான கையிருப்பு இல்லாத காரணத்தினாலும், அரிசி மற்றும் நெல்லுக்கான அதிக கையிருப்பு தனியார் வசம் இருப்பதனாலும் எதிர்காலத்தில் இந்த நிலை ஏற்படலாம் என அவர் கூறியுள்ளார்.

இதன்படி, அரிசி விலை அதிகரிப்பானது – நுகர்வோரை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து அமைச்சரவைக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஓகஸ்ட் 21 ஆம் திகதி நிலவரப்படி, நிலவும் வறட்சியினால் மொத்தமாக 46,904 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை கையளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர் சேதங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 41,402 ஆக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் 23,286 ஏக்கர் நிலப்பரப்பில் அதிகளவான பயிர் சேதங்கள் பதிவாகியுள்ளன. அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 27,904 ஆக அதிகரித்துள்ளது.

இரண்டாவது அதிகளவிலான பயிர் சேதங்கள் உடவளவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளன. இதன்படி, இந்தப் பகுதியில் 14,667.5 ஏக்கர் அறுவடை நிலங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 5,867 ஆக உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்