விளையாட்டுப் போட்டியின் போது மரணித்த மாணவர்களின் உடல்கள் பெருந்திரளானோர் பங்கேற்புடன் நல்லடக்கம்

🕔 August 18, 2023

வுனியாவில் வலய மட்ட விளையாட்டுப் போட்டியின் போது, அங்கிருந்த குழியில் இருக்கும் நீரில் முழ்கி மரணமடைந்த இரு மாணவர்களின் உடல்களும் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்று (18) அடக்கம் செய்யப்பட்டது.

வவுனியா வலயமட்ட விளையாட்டுப் போட்டி – பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக் கழக மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது மைதானத்தின் அருகில் இருந்த நீர் குழியில் விழுந்த வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலத்தைச் சேர்ந்த 15 மற்றும் 14 வயதுடைய இரு மாணவர்கள் மரணமடைந்தனர்.

குறித்த இரு மாணவர்களின் உடல்கள், பட்டாணிச்சூர் பள்ளியில் பார்வைக்காக வைக்கப்பட்டு பட்டாணிச்சூர் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது, முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாட் பதியுத்தீன், வலயக் கல்வி அலுவலகத்தினர், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்