இடமாற்ற உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்துவதற்கு தீர்மானம்

🕔 August 18, 2023

டமாற்ற உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இடமாற்ற உத்தரவை பின்பற்றுமாறு ஆசிரியர்களுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டாலும், அவர்கள் தொடர்ந்தும் அதே பள்ளிகளில் பணிபுரிவதாக அமைச்சுக்குப் புகார்கள் கிடைத்துள்ளன.

இருந்த போதிலும், சேவைத் தேவைகளின் அடிப்படையில் – சில ஆசிரியர்களை தமது பாடசாலைகளில் தக்கவைத்துக் கொள்ளுமாறு அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அவ்வாறான ஆசிரியர்களுக்கு இந்த தீர்மானத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் அதிகமாக உள்ள பாடசாலைகளில் இருந்து – பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்