பாசிசப் புலிகளால் ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம்களை நினைவுகூரும் சுஹதாக்கள் தினம் அனுஷ்டிப்பு

🕔 August 12, 2023

– உமர் அறபாத் –

மீழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ம் திகதி படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம் பொதுமக்களை நினைவுகூரும் 33 வது சுஹதாக்கள் தினம் இன்று ஏறாவூரில் அனுஷ்டிக்கப்பட்டது.

சுஹதக்கள் நினைவு தினத்தையொட்டி பொதுச்சந்தை, வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெள்ளைக்கொடி எங்கும் பறக்கவிடப்பட்டன.

ஏறாவூரில் நூறுஸ்ஸலாம் பள்ளிவாயலில் இன்று காலை 6 மணிக்கு துஆ பிராத்தனையுடன் இடம்பெற்றது. அ

இதனையடுத்து பேரணி நடைபெற்று – அதன் முடிவில் ஏறாவூர் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத்திடம் சுஹதாக்கள் நினைவுப் பேரவையினால் மஹஜர் ஒன்று நகரசபை வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், கல்விமான்கள், ஊர்பிரமுகர்கள், மத்ரஸா மாணவர்கள் என பெருந்திரளான பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் திகதியன்று இரவுப் பொழுதில் ஏறாவூரில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள், முதியோர் என்கிற பாகுபாடுகளின்றி, பாசிசப் புலிகள் இயகத்தவர்களால் – முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 121 பேர் கொல்லப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்