உள்நாட்டு வரி வருமானம் 93 சத வீதத்தினால் அதிகரிப்பு
உள்நாட்டு இறைவரி திணைக்களம் – கடந்த வருடத்தின் முதல் அரையாண்டில் சேகரித்த வரி வருமானத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் அரையாண்டில் சேகரித்த வரி வருமானம் 93 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
இந்தத் தகவலை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதியில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் மொத்த வரி வருமானமாக 696,946 மில்லியன் ரூபா சேகரிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் 361,832 மில்லியன் ரூபா சேகரிக்கப்பட்டதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரிக் கொள்கையில் ஏற்பட்டுள்ள தீர்க்கமான மாற்றங்கள், நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைதல் மற்றும் வரி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் செயல்திறன் ஆகியவை, வரி வருவாய் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.