நீதிபதி வீட்டில் தங்கம், பணம் திருட்டு

🕔 July 4, 2023

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்கமும், 06 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணமும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் அத்தனகல்ல பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

திருட்டுச் சம்பவத்தின் போது நீதிபதி வீட்டில் இருக்கவில்லை என்றும், வீட்டுப் பணியாளர்கள் மாத்திரமே இருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட நகைகள் மற்றும் பணம் ஆகியவை வீட்டின் அலுமாரியில் இருந்த சிறிய பெட்டகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் வழிகாட்டலின் கீழ், அத்தனகல்ல பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் யசேந்திர நாலக இந்த விசாரணைகளை மேற்பார்வையிடுகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்