சுனாமியின் போது தப்பிய மரண தண்டனைக் குற்றவாளி, 19 வருடங்களுக்குப் பின்னர் கைது

🕔 June 15, 2023

லங்கையை சுனாமி தாக்கிய போது தப்பியோடிய மரண தண்டனை கைதி ஒருவர் 19 வருடங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2001ஆம் ஆண்டு ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரும் அவருடைய சகோதரரும் கைது செய்யப்பட்டனர்.

2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது – விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் தப்பிச் சென்றார்.

சந்தேகநபர் இல்லாமல் நடத்தப்பட்ட வழக்கில், 2012ஆம் ஆண்டு மே மாதம் சந்தேகநபரின் சகோதரர் விடுவிக்கப்பட்ட நிலையில், காணாமல் போன சந்தேக நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

தற்போது 54 வயதாகும் சந்தேக நபரை, றாகம நகரில் வைத்து நேற்று (14) இரவு பொலிஸார் கைது செய்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்