கிழக்கு ஆளுநரால் 350 நீர் பம்பிகள் வழங்கி வைப்பு

🕔 June 10, 2023

கிழக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகளை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நீர் பம்பிகளை இன்று சனிக்கிழமை (10) வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வு மட்டக்களப்பு, கல்லடி சன்சைன் கிறான்ட் மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு இடம்பெற்றது.

வாழை மற்றும் மாதுளை பழ உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மேற்படி நீர் பம்பிகள் வழங்கப்பட்டன.

இதன்போது தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்கட்டமாக 350 நீர் பம்பிகள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டன.

ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்,தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் இணை செயலாளர் பிரசாந்தன், மாகாண பிரதித் திட்டப்பணிப்பாளர் கே. கருணாகரன் மற்றும் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கிழக்கு மாகாண உத்தியோகத்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்