சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 மில்லியன் ரூபா மதிப்புள்ள பொருட்கள் சுங்கத்திடம் சிக்கின

🕔 June 6, 2023

ட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் கொள்கலன் ஒன்றை இலங்கை சுங்கத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.

சுங்கத் துறையின் தகவலின் படி, அந்தக் கொள்கலனில் கிட்டத்தட்ட 300 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் உள்ளன.

200 மில்லியன் ரூபா மதிப்பிலான அழகுசாதனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்றும் முச்சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், சிகரெட் போன்றவையும் கொள்கலனுக்குள் காணப்பட்டன.

வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்யும் போர்வையில் – குறித்த பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்