அலி சப்ரியால் வந்த வினை: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகையொன்றை நீக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர

🕔 May 29, 2023

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமான நிலையத்தின் பிரமுகர் முனையங்களில் சோதனையின்றி வருவதற்கு வழங்கப்படும் சலுகைகள் நீக்கப்பட வேண்டும் என, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவரின் நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்துவதையும் இதன்போது அமைச்சர் கண்டித்துள்ளார்.

அண்மையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் அமரவீர அலி சப்ரி அண்மையில் அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் பொருட்களை வெளிநாட்டிலிருந்து கொண்டிருவந்மை குறித்து கூறுகையில்; “இது திருட்டு மற்றும் மோசடிக்கு சமமானதாகும். அலி சப்ரி ரஹீமின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குவதற்கான பிரேரணை கொண்டு வரப்பட்டால் அதற்கு நான் ஆதரவளிப்பேன்” என்றார்.

“இதுபோன்ற நாடாளுமன்ற சிறப்புரிமைகள் நீக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து. நாடாளுமன்ற உறுப்பினர்களும் சாதாரண பயணிகள் முனையம் வழியாக வந்து சாதாரண பயணிகளைப் போல் சோதனை செய்யப்படலாம். வெளிநாட்டிலிருந்து வருகை தரும் ஜனாதிபதி மற்றும பிரதமர்களுக்கு பிரமுகர் முனையத்தைப் பயன்படுத்தலாம். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவ்வாறான சலுகைகள் தேவையில்லை” என அமைச்சர் அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்