‘பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம்’: தகவலையடுத்து, அக்குரணையில் பாதுகாப்பு தீவிரம்
அக்குரணை பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது..
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிதுள்ளார்.
மேலதிக பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ராணுவத்தினரும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொலிஸாரின் வேண்டுகோளை அடுத்து – குறித்த பகுதியில் ராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளதாகவும் டெய்லி மிரர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல் நேற்று (18) வெளியானதையடுத்து அக்குரணையில் பதட்டமான சூழ்நிலையொன்று நிலவியது.