முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு
முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா நாளை (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதித்திட்டம் குறித்த அவரது சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்காகவே அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
என்ன சொன்னார்?
ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலுக்கு பின்னணியில் பாரிய சதித்திட்டமொன்று இடம்பெற்றுள்ளதாக 2021ஆம் ஆண்டு அப்போது சட்ட மா அதிபராக இருந்த தப்புல டி லிவேரா ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தார்.
சாட்சியங்கள், உளவுத் தகவல்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஏனைய தகவல்கள் என்பன மிகவும் கவனமாக மதிப்பீடு செய்யப்பட்டு இத்தாக்குதலின் தலைமைத்துவம் தொடர்பான தீர்மானத்தினை எட்டவேண்டும் எனவும் அவர் கூறியிருந்தாார்.
அரச உளவுச் சேவையின் தகவல்களின்படி தாக்குதல் இடம் பெற்ற நேரம் தாக்குதலின் இலக்கு, தாக்குதல் நடத்தப்பட்ட முறை மற்றும் மேலும் தகவல்களின்படி பாரிய சதித்திட்டமொன்று இடம்பெற்றமைக்கான சாட்சியங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்திருந்தார்.