உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு

🕔 March 8, 2023

ள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை, எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த முன்மொழியப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி, மிக பொருத்தமானதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அஞ்சல் மூல வாக்களிப்புக்கான திகதி குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இம்மாதம் 09ஆம் திகதி அதாவது நாளைய தினம் தேர்தலை நடத்துவதற்கு ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும் தேர்தலுக்கான நிதி கிடைக்காமை காரணமாக குறித்த திகதியில் தேர்தலை நடத்த முடியாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்த நிலையிலேயே புதிய திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்