தேர்தலை மார்ச் 19க்கு முன்னர் நடத்துங்கள்: எதிர் கட்சிகள் கூட்டாக எழுத்து மூலம் கோரிக்கை

🕔 March 5, 2023

ள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்துமாறு கோரி அனைத்து பிரதான எதிர்க்கட்சிகளும் கூட்டாக தேர்தல் ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

‘சட்டப்படி தேர்தலை நடத்துவதற்கான ஒரே தடையை உச்ச நீதிமன்றம் இப்போது நீக்கியுள்ளது, 19 மார்ச் 2023 அன்று அல்லது அதற்கு முன் தேர்தலை நடத்துவது உங்கள் கட்டாயக் கடமையாகும்.

திரைசேரிச் செயலாளருடன் அல்லது வேறு யாருடனோ நீங்கள் இது தொடர்பில் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை நாங்கள் காணவில்லை’ என, அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்க முஸ்லிம் காஙகிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகள் இந்தக் கடிதத்தை கூட்டாக அனுப்பி வைத்துள்ளன.

Comments