உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மதிப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

🕔 March 4, 2023

ள்ளூராட்சி தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தடுத்து வைத்துள்ளமையை தவிர்க்குமாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பை தாம் மதிப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவித்துள்ளார்.

கித்துல்கல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“நீதிமன்ற தீர்ப்பை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். அது அனைவரினதும் பொறுப்பாகும். அதன்படி, நிதியமைச்சும் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய செயற்படும்” என்றார்.

இந்தநிலையில், நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க செயற்பட வேண்டும் என்பது தமது கடமையாகும் என்றும் நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: தேர்தலுக்கான புதிய திகதி அடுத்த வாரம்: நிதியைத் தடுப்து வைப்பதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்