ஜனாதிபதி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பவில்லை; அவர் பொய் சொல்கிறார்: முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு

🕔 February 23, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தான் ராஜினாமா செய்யும் போது, அது தொடர்பில் எவ்வித தகவலையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு அனுப்பவில்லை என்று முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க எவ்வித குறுஞ்செய்தியையும் தனக்கு அனுப்பவில்லை எனவும், ஜனாதிபதி பொய் கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய ஜனாதிபதி; “நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டாம் என முஜிபுர் ரஹ்மானுக்கு நான் அறிவுறுத்தியிருந்தேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ரணில் கூறிய விடயம்

நாடாளுமன்றில் இன்று ஜனாதிபதி ரணில் உரையாற்றும் போது; “முஜிபுர் ரஹ்மானை நானே நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தேன். அவர் பலிக்கடா ஆக்கப்படப் போவது எனக்கு தெரியும்.

முஜிபுர் ரஹ்மானை நாடாளுமன்றத்தில் வைத்திருக்க முயற்சித்தேன், இனிமேல் அது பற்றி பேசப்போவதில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் மேயர் வேட்பாளராகக் களமிறங்கும் பொருட்டு, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முஜிபுர் ரஹ்மான் ராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்