உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்குமா; இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்: வாக்குச் சீட்டு அச்சிடும் பணி ஆரம்பித்துள்ளது

🕔 February 9, 2023

திர்வரும் இரண்டு நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும், எந்தவித இடையூறும் இன்றி தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தேவையான நிதியை ஏற்பாடு செய்யுமாறு – திறைசேரி செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்