அம்பாறையில் பாரிய கஞ்சாத் தோட்டம்: பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றி அழிப்பு

🕔 February 4, 2023

– பாறுக் ஷிஹான் –

ம்பாறை – பக்மிட்டியாவ வனப்பகுதியில் பெரிய கஞ்சா கஞ்சாத் தோட்டமொன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி அழித்துள்ளனர்.

சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் செய்கை பண்ணப்பட்ட இந்தக் கஞ்சாத் தோட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (3) மாலை கண்டுபிடிக்கப்பட்டது.

அக்கரைப்பற்று ராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, ராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அறுகம்பை விஷேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய தேடுதலில், பக்மிட்டியாவ வனப்பகுதியில் பயிரிடப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இதன் போது சுமார் 7,500 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை ஒவ்வொன்றும் சுமார் 3 – 6 அடி என உயரம் வரை வளர்ந்திருந்ததன.

கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் பாதுகாப்புத் தரப்பினரால் அழிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை தமண பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்