புதிய வரி விதிப்புக்கு எதிராக, தெ.கி.பல்கலைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்

🕔 February 1, 2023

– எம்.என்.எம். அப்ராஸ் –

ரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள  புதிய வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்கிழக்கு  பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்புப் போராட்டம் இன்று (01) பல்கலைகழக நுழைவாயிலில் இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைகழகத்தின் ஆசிரியர் சங்க உயர்மட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பீடங்களையும் சேர்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது இவர்கள் அரசு மேற்கொண்டுள்ள பாரிய வரி விதிப்புக்கு எதிராக பல்வேறு சுலோகங்கள் ஏந்தியவாறு நீதி கேட்டு கோஷங்களை எழுப்பினர்.

‘அநீதியான வரிவிதிப்பை நிறுத்து’, ‘அரசின் ஊழலால் விழுந்தவர்களை வரி ஏறி மிதிக்கிறது’, ‘பணத்தை எடுத்தவரிடம் கேட்பதே நீதி எங்களிடம் கேட்பது அநீதி’ – போன்ற பதாகைகளை ஏந்தியாவாறு விரிவுரையாளர்கள் அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் அரசுக்கும் மக்களுக்கும் தங்களது நிலைப்பாடுகளை தெளிவு படுத்தி கருத்துக்ககளையும் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்