நாட்டின் பெயரை ‘சிங்கலே’ என மாற்ற வேண்டும் என கோரிக்கை
புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய நாட்டின் பெயரை ‘சிங்கலே’ என, மாற்ற வேண்டும் என்று, பொது பல சேனா அமைப்பு கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளது.
கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளும் போது, ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தொடர்பில் சிக்கல்கள் நிலவுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.