ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிலோ மீற்றர் தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே இன்று இரவு இலங்கை நேரப்படி 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவு கோலில் 7.3 மெக்னிடியூட்டாக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
கடலுக்கு அடியில் 60 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.