பொருளாதார நெருக்கடியைச் சுட்டிக்காட்டி, இலங்கை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை

🕔 March 13, 2022

லங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரித்தானியா திருத்தம் செய்துள்ளது.

‘இறக்குமதிக்கு செலுத்துவதற்கு கடுமையானநாணயத் தட்டுப்பாடு காரணமாக, மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறையுடன் இலங்கையில் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருகிறது.

மளிகைக் கடைகள், எரிவாயு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் நீண்ட வரிசைகள் இருக்கலாம்.

உள்ளுர் அதிகாரிகள்ட பங்கீட்டு முறையில் மின்சார விநியோகத்தை விதிக்கலாம். இதன் விளைவாக மின்சாரம் தடைபடலாம்’ என இலங்கைக்கான பயண ஆலோசனையில் இங்கிலாந்து மேலும் கூறியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்