ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்புக் கோர தயார்: அவரின் சட்டத்தரணிகள் தெரிவிப்பு

🕔 March 9, 2022

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான, நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் இரண்டாவது வழக்கில், அவர் நீதிமன்றில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதற்கு தயார் என, அவரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நடித்த திரைப்படம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் பங்கேற்க, அவருக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

மார்ச் 24 ஆம் திகதி நடைபெறும் திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள ரஞ்சன் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தார்.

எனினும், இந்த நிகழ்வில் கலந்து கொள்ள சிறையில் உள்ள முன்னாள் எம்.பிக்கு அனுமதி வழங்க உச்ச நீதிமன்றம் இன்று (09) மறுப்பு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற அவமதித்ததாகக் கூறப்படும் இரண்டாவது வழக்கின் பொருட்டு, ரஞ்சன் ராமநாயக்க இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்