குறைபாடுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்ட மதிப்பீடுகள்: உறுப்பினர்கள் கண்டனம்

🕔 December 5, 2021

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை (05) சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இது தொடர்பில் தயாரிக்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு முன்கூட்டி வழங்கப்பட்டுள்ள ஆவணங்கள், பல்வேறு குறைபாடுகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்துக்கான செலவீன மதிப்பீடு தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள ஆவணத்தில், 2021ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் வரையிலான உண்மை செலவீனம் காட்டப்படாமல், 2022ஆம் ஆண்டுக்கான செலவீனம் மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று 2022ஆம் ஆண்டுக்கான வருமான மதிப்பீட்டு ஆவணத்திலும் 2021ஆம் ஆண்டுக்கான உண்மை வருமானம் காட்டப்படாமல், 2022ஆம் ஆண்டுக்கான வருமானம் மதிப்பிடப்பட்டுள்டளது.

இவ்வாறான குறைபாடுகளுடன் வரவு – செலவுத் திட்ட ஆவணங்கள் தயாரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என, அச்சபையின் உறுப்பினர்கள் பலரும் ‘புதிது’ செய்தித்தளத்திடம் சுட்டிக்காட்டியதோடு, தமது கண்டனங்களையம் தெரிவித்தனர்.

இதேவேளை, போதிய மற்றும் கட்டாயமான தகவல்கள் உள்ளடக்கப்படாமல் சமர்பிக்கப்படவுள்ள மேற்படி வரவு – செலவுத் திட்டத்தை எவ்வாறு ஆதரிக்க முடியும் எனவும் இது தொடர்பில் துறைசார்ந்தோர் கேள்வியெழுப்புகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்