நிபந்தனைகளின் அடிப்படையில் சமையல் எரிவாயு சந்தைக்கு வருகிறது
சமையல் எரிவாயுவை சில நிபந்தனைகளின் கீழ் நாளை (05) முதல் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடுமுழுவதும் சமையல் எரிவாயு சிலின்டர் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தியுள்ளதாக லிற்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது.
நேற்று முன்தினம் (2) காலை தொடக்கம், மறு அறிவித்தல்வரை இதனை அமுல்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
இது இவ்வாறிருக்க தமக்கு விநியோகத்தை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்படவில்லை என்றும், அதனால் தொடர்ச்சியாக தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.