நாகூர்தம்பி போடியார் மகன் முன்னாள் வங்கி உத்தியோகத்தர் நஸீர் காலமானார்
🕔 October 21, 2021
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.ஏ. நஸீர் இன்று (21) கொழும்பில் வபாத்தானார்.
அன்னார் இலங்கை வங்கியின் முன்னாள் உத்தியோகத்தரும், சிலோன் சிப்பிங் நிறுவனத்தின் அட்டாளைச்சேனை கிளையின் முன்னாள் முகாமையாளரும் ஆவார்.
அவர் – றஸ்மி, இம்தாத் மற்றும் சப்றீனா ஆகியோரின் தகப்பனாரும், ஓய்வுபெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் எம்.ஏ. சலீம் அவர்களின் இளைய சகோதரருமாவார்.
நாகூர் தம்பி போடியார் என அழைக்கப்படும் மர்ஹும் அபூபக்கர் அவர்களின் இளைய மகனான இவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் றிஸ்வி சின்னலெப்பை, முன்னாள் உதவி அரசாங்க அதிபர் மர்ஹும் ஏ.சி. நஜிமுத்தீன், சுங்கத்திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் எஸ். நியாஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாருக்கு மேலான சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திப்போம்.
TAGS:
அட்டாளைச்சேனை