தலைப்புச் செய்திகள்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ரிசிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைகளை நீக்குவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதற்கிணங்க அரிசி மீதான அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்படும் என, அரசாங்க தரப்புகளை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை அரிசி விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு, 100,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கும் – அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.