நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட பதவிப் பிரமாணம்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட இன்று (21) காலை பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
பசில் ராஜபக்ஷ – நாடாளுமன்ற உறுப்பினராகுவதற்காக, தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இவர் ராஜிநாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாா செய்தமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ஜயந்த நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.