ஹைட்டியில் பாரிய நிலநடுக்கம்: 300க்கும் மேற்பட்டோர் பலி

🕔 August 15, 2021

ஹைட்டியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக 300க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், ஆகக்குறைந்தது 1800 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹைட்டியின் தென்மேற்குப் பகுதியில் சனிக்கிழமையன்று 7.2 ரிக்டர் அளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதோடு, நகரங்கள் அழிந்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பலர் காணாமல் போயுள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

சில மணித்தியாலங்களுக்கு முந்தைய தகவல்களின் படி அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 304 என தெரிவிக்கப்பட்டிருந்தது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

தொடர்பான செய்தி: ஹைட்டி ஜனாதிபதி படுகொலை: மனைவியும் படுகாயம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்