கொவிட் தடுப்பு மருந்து செலுத்தும் நடவடிக்கை: நேற்றைய தினம் நாட்டில் சாதனை

🕔 July 27, 2021

திகளவு கொவிட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நாளாக, நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

இதன்படி நேற்றைய தினம் 04 லட்சத்து 37 ஆயிரத்து 878 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

356,628 பேருக்கு சினோபாம் முதலாவது தடுப்பூசி நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 55,722 பேருக்கு சினோபாம் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மொடர்னா முதலாவது தடுப்பூசி 25,240 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று 108 பேருக்கு பைஸர் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்