பயணத்தடை இன்று தளர்வு: மட்டுப்படுத்தப்பட்ட பேரூந்து சேவைகள் முன்னெடுப்பு

🕔 June 21, 2021

யணத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு பேருந்து சேவைகளே முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் தொடக்கம், வழமை போன்று பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி சுமார் 6000 பேருந்துகளை அடுத்த வாரம் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வழமைபோன்று பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் கூறியுள்ளார்.

மாகாணங்களுக்குள் தேவையான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றதா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்