89 மேலதிக வாக்குகளால் துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றம்

🕔 May 20, 2021

கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் 89 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெற்றது.

இதில் சட்ட மூலத்திற்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதன்படி 89 மேலதிக வாக்குகளினால் கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்துக்கு ஆளுந்தரப்பு கட்சிகள் அனைத்தும் ஆதரவு வழங்கியதுடன் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றுதமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன எதிராக வாக்களித்திருந்தன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்