திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கொரோனா தொற்று காணரமாக உயிரிழப்பு

🕔 May 18, 2021

மிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ன சிங்கம் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

இவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமானதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை மாவட்டம் – மூதூர், சேனையூரில் 1941 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 80 வயது தாண்டியுள்ளது.

2002ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் சார்பாக நாடாளுமன்றம் சென்ற இவர், பின்னர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டடியிட்டு வெற்றியீட்டி நாடாளுமன்ற உறுப்பினரானார்.

இதன் பின்னர் 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இவர் போட்டியிட்ட போதும் வெற்றிபெறவில்லை. அதனையடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இவர் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இவர் ஆசிரியராக, அதிபராக, கோட்டக் கல்லிப் பணிப்பாளராக மற்றும் பிராந்திய உதவிக் கல்விப் பணிப்பாளர் பதவிகளையும் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்