புதன்கிழமை நோன்பு ஆரம்பம்: ரமழான் தலைப்பிறை இன்று தென்படவில்லை
இலங்கை நாளை மறுதினம் புதன்கிழமை தொடக்கம் நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
ரமழான் மாதத்துக்கான தலைப் பிறை இன்று தென்படாமை காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இலங்கையில் ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை எங்காவது தென்பட்டால், அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்திருந்தது.