
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் நடைபெறும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 05 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
2021 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



