ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை: அதி ரகசியம் அடங்கிய பாகங்கள் சட்ட மா அதிபரிடம் கையளிப்பு
ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் இறுதி அறிக்கையில், ரகசிய விடயங்கள் அடங்கியதாக கூறப்படும் 22 பகுதிகள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சட்டப் பிரிவு பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி ஹரிகுப்த சேனாதீர, இந்த அறிக்கையின் பாகங்களை கையளித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 65 பாகங்கள் கடந்த 02 ஆம் திகதி சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டிருந்தன.
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 87 பாகங்களைக் கொண்டதாகும்.
இந்நிலையில், இன்று கையளிக்கப்பட்ட 22 பாகங்களும் ஆணைக்குழு முன்னிலையில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் அதிக ரகசியமானவை என சட்டத்தரணி ஹரிகுப்த சேனாதீர தெரிவித்துள்ளார்.