ஈஸ்டர் தின தாக்குதலுக்கு நீதி கோரி, மார்ச் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்க அழைப்பு

🕔 March 1, 2021

ஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு நீதி கிடைக்காமையை முன்னிறுத்தி எதிர்வரும் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்கும் படி பேராயர் மெல்கம் ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் உறவுகளை இழந்த அனைத்துத் தரப்பினருக்கும் நீதி கோரும் போராட்டமாகக் கறுப்பு ஞாயிறு தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தினத்தில் கத்தோலிக்க மக்கள் கறுப்பு நிறத்தில் உடை அணிந்து விசேடபிரார்த்தனைகளில் கலந்துகொள்ளும்படியும் பேராயர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதிஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், குறித்த அறிக்கை பல தரப்பினராலும் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்