இலங்கை வரும் பாகிஸ்தான் பிரமரின் நாடாளுமன்ற உரை ரத்து

🕔 February 17, 2021

லங்கைக்கு வருகை தரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இன்ரான் கான், நாடாளுமன்றில் உரையாற்றவிருந்த நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதி இன்ரான் கான், இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றும் நிகழ்ச்சி நிரல், ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உத்தியோகத்தர் ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.

கொவிட் நிலைமைகளைக் கருத்திற் கொண்டே, பாகிஸ்தான் பிரதமரின் நாடாளுமன்ற உரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, எதிர்வரும் 22ஆம் திகதி – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை வரவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்