சுதந்திர தினைத்தையொட்டி 146 கைதிகளுக்கு, ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு

🕔 February 4, 2021

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட மன்னிப்பில் 146 கைதிகள் இன்று (04) விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விசேட மன்னிப்பு நான்கு வகையானோருக்கு வழங்கப்படுகின்றது.

  • 65 வயதுக்கு மேற்பட்ட, சிறைத்தண்டனையில் பாதி சிறைவாசம் அனுபவித்தோர்.
  • 50 வயதுக்கு மேற்பட்ட, 25 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தோர்.
  • தண்டனையின் பாதியை அனுபவித்த இளம் குற்றவாளிகள்.
  • அபராதம் செலுத்த இயலாமல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டோர்.

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் இன்றாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்